Miruga


 கதை:-

            நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழந்தையுடன் இருக்கும் ஆதரவற்ற பணக்கார வீட்டுப் பெண்களைத் தேடிச்சென்று அவர்களுடன் பழகி, அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, பின் தன்னைப் பற்றிய உண்மை தெரிய வரும் போது அவர்களைக் கொலை செய்துவிட்டு, அவர்களது பணம், நகைகளுடன் தப்பிப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர் ஸ்ரீகாந்த். கோவாவில் அப்படி ஒரு குடும்பத்தை பாம் வைத்து தீக்கிரையாக்கிவிட்டு, ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு டீ எஸ்டேட் முதலாளியான ராய் லட்சுமியைச் சந்தித்து நல்ல பெயர் வாங்கி, அங்கேயே வேலைக்குச் சேர்ந்து, அவரையே திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீகாந்த் பற்றிய உண்மைகள் ராய் லட்சுமிக்குத் தெரிய வருகிறது. அவரிடமிருந்து தன்னையும், தன் குழந்தை, தங்கையைக் காப்பாற்றப் போராடுகிறார். அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.


0 Comments